செல்போன் டவர் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீரநாயக்கன்பாளையம் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: செல்போன் டவர் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீரநாயக்கன்பாளையம் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: செல்போன் டவர் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீரநாயக்கன்பாளையம் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை தமிழ்நாடு வேளான் கல்லூரி அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. அதற்கான உபகரணங்கள் இன்று வந்து இறங்கிய நிலையில், செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் செல்போன் டவர் அமைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அவர்கள் கூறுகையில், அப்பகுதியில் செல்போன் டவர் அமையும் பட்சத்தில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் எனவும் குழந்தைகள் முதியவர்கள் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். மேலும் 300க்கும் அதிகமான குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை தவிர்த்து மாற்று இடத்தில் இதனை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...