கோவையில் உள்ள நகைக்கடை மற்றும் உரிமையாளர் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

கோவை: கோவையில் நகை கடைகள் மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் நகை கடைகள் மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை டவுன்ஹால் மற்றும் பெரிய கடைவீதி பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட சில்லரை வியாபார நகைக்கடைகள் உள்ளன. அதேபோல 300க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனைகள் மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், இன்று கோவை பெரியகடை வீதி பகுதியில் உள்ள ஸ்ரீ வாசவி செயின்ஸ் என்ற நகை கடையில் திடீரென உள்ளே சென்ற 6 பேர் கொண்ட வருமானவரித் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல காந்திபார்க் பகுதியிலுள்ள நகைக்கடையின் உரிமையாளர் பாலமுருகனின் வீட்டிலும் ஆறு பேர் கொண்ட குழுவினர் அதே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான கந்தா சில்வர்ஸ் என்ற மொத்த வியாபார கடையிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனையானது கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் இவர்கள் பணமதிப்பிழப்பின் போது பல கோடி ரூபாய்களை வங்கிக்கணக்கில் பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...