வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் வேளாண்‌ பல்கலையில்‌ சுழற்சாவி முகவர்கள்‌ பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் சுழற்சாவி முகவர்கள்‌ பயிற்சி வரும் 10.02.2020 முதல்‌ 28.02.2020 வரை நடைபெறுகிறது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் சுழற்சாவி முகவர்கள்‌ பயிற்சி வரும் 10.02.2020 முதல்‌ 28.02.2020 வரை நடைபெறுகிறது.

இன்றைய சூழ்நிலையில் புதிய மற்றும்‌ புதுப்பிக்கவல்ல எரிசக்தியின்‌ உற்பத்தி பெருக்கம்‌ மற்றும்‌ மாசற்ற முறையில்‌ எரிபொருளை உற்பத்தி செய்வது என்பது இன்றியமையாதது. இந்த நோக்குடன்‌, புதுடில்லியில்‌ உள்ள புதிய மற்றும்‌ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின்‌ நிதியுதவியுடன்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ உள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறை, சாண எரிவாயு மேம்பாடு மற்றும்‌ பயிற்சி மையத்தில்‌ 2019 - 20-ம்‌ ஆண்டிற்கான பயிற்சிகள்‌ பிப்ரவரி மாதம்‌ நடைபெற உள்ளன.

சுழற்சாவி முகவர்களுக்கான பயிற்சியில்‌ கலந்துகொள்ளும்‌ வேலையில்லா பட்டதாரிகளுக்கு சுயதொழில்‌ முனையவும்‌ மற்றும்‌ ஊரக வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்‌ கொள்ளவும்‌ ஏதுவாக அமையும்‌.

சுழற்சாவி முகவர்களுக்கான பயிற்சி விவரங்கள்‌

பயிற்சியின்‌ தலைப்பு : புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ - வளங்குன்றா எரிபொருள்‌ மற்றும்‌ அங்கக உரத்தயாரிப்பில்‌ கரிம எரிவாயு தொழில்நுட்பம்‌

தகுதி : வேளாண்மையில்‌ பட்டயப்படிப்பு மற்றும்‌ இதர பட்டயப்படிப்பு முடித்த அல்லது வேலையில்லா பட்டதாரிகள்‌

பயிற்சி காலம்‌ : 10.02.2020 முதல்‌ 28.02.2020 வரை (15 நாட்கள்)

சலுகைப்படிகள்‌ : ரூ.300/ நாள்‌ மற்றும்‌ அசல்‌ பயணப்படி ரூ. 700-க்கு மிகாமல்‌ வழங்கப்படும்‌

தகுதியான நபர்கள்‌ 07-02.2020-குள்‌ தங்கள்‌ தகவல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு

பேராசிரியா மற்றும்‌ தலைவர்,

புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறை,

வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

மின்னஞ்சல் : bioenergy @tnau.ac.in

தொலைபேசி 0422-6611276 / 94864 19600 / 80567 56712

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...