தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் தமிழில் வழிபடுவதை உறுதி செய்திட முடியுமா? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி

திருப்பூர்: தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்றால் தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழை கட்டாயம் வழிபாட்டு மொழியாக்க முடியுமா என திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஆதரவு தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர்: தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்றால் தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழை கட்டாயம் வழிபாட்டு மொழியாக்க முடியுமா என திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஆதரவு தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து திருப்பூரில் தாராபுரம் சாலையில் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தமிழகத்திலும் இந்தியாவிலும் எந்த ஒரு மதத்திற்கும் பாதிப்பில்லை என்பதை தெரிவிக்கும் விதமாகவே பாஜக சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்ற எனவும் அசாமை தனிநாடாக ஆக்க வேண்டும் என சதித்திட்டத்தோடு செயல்பட்ட ஜே.என்.யூ மாணவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல பிரிவினைவாத சக்திகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதா என கேள்வி எழுப்பினார்.

முகமது அலி ஜின்னா, காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய மூவருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. அன்று அவர் இந்தியாவை பிரித்தார், இன்று காங்கிரஸ் மற்றும் திமுக அதே வேலையை செய்து கொண்டிருப்பதாக கூறிய அவர், தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்பதை 200% ஆதரிக்கிறேன் ஆனால், தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் தமிழில் வழிபடுவதை உறுதி செய்திட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...