திருப்பூர்: திருப்பூரில் உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து பெண்கள் தாலிக்கயிற்றுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து பெண்கள் தாலிக்கயிற்றுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் பகுதிகளில் பவர் கிரிட் நிறுவனம் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்தும், கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியதை போல கூடுதல் இழப்பீடு கேட்டும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் பெண்கள் தாலிக் கொடியை மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒப்படைத்துச் செல்வதாக தாலிக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், விவசாய நிலங்களில் டவர்லைன் அமைக்க வரும் பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் பகுதிகளில் பவர் கிரிட் நிறுவனம் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததை கண்டித்தும், கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியதை போல கூடுதல் இழப்பீடு கேட்டும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றால் பெண்கள் தாலிக் கொடியை மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒப்படைத்துச் செல்வதாக தாலிக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், விவசாய நிலங்களில் டவர்லைன் அமைக்க வரும் பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.