கோவையில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

கோவை: கோவை அடுத்த சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் காதலிக்க மறுத்த இளம் பெண்ணுடன் எடுத்த ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை அடுத்த சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளைஞர் காதலிக்க மறுத்த இளம் பெண்ணுடன் எடுத்த ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள விவேகானந்தா வீதியைச் சேர்ந்தவர் ரூபன் (29). இவர் இன்ஜினியரிங் தொழில் செய்து வருகிறார். மேலும், இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளம் பெண் ரூபனிடமிருந்து விலகி காதலிக்க மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் காதலித்து வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட உள்ளதாக காதலியின் சகோதரிக்கு மிரட்டல் விடுத்து, அவரது புகைப்படங்களை சகோதரியின் செல்போன் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக அந்த பெண்ணின் சகோதரி, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ரூபன் கைதுசெய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...