கோவை: சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவை: சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28 நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து கோவையை சேர்ந்த 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா ஒருவர் என 8 பேர் கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்கள் 8 பேருக்கும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்ததில் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ வைரஸ் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவித்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 பேரும் 28 நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் 8 பேரும் தனி இடத்தில் வைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
சீனாவில் இருந்து கோவையை சேர்ந்த 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா ஒருவர் என 8 பேர் கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்கள் 8 பேருக்கும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்ததில் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ வைரஸ் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவித்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 பேரும் 28 நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் 8 பேரும் தனி இடத்தில் வைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.