பிரதமர் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து மேன் வெர்ஸஸ் வைல்ட்(Man vs Wild) நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து மேன் வெர்ஸஸ் வைல்ட்(Man vs Wild) நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது ஒபாமா கலந்துகொண்டிருந்தார். அதேபோல, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தனர்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக ரஜினிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது மேன் வெர்ஸஸ் வைல்ட் (Man Vs Wild) நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து இதற்கான படப்பிடிப்பில் அவர் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான மேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது ஒபாமா கலந்துகொண்டிருந்தார். அதேபோல, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தனர்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக ரஜினிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது மேன் வெர்ஸஸ் வைல்ட் (Man Vs Wild) நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பியர் க்ரில்ஸுடன் இணைந்து இதற்கான படப்பிடிப்பில் அவர் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.