கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நியாய விலை கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரையை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நியாய விலை கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரையை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அய்யர்பாடி ரோப்வே. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்த தேயிலைத் தோட்டத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இவர்களின் தேவைக்காக நியாய விலை கடை இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இப்பகுதிக்கு வந்த 5 காட்டு யானைகள் தொழிலாளர் குடியிருப்புக்குள் உள்ள நியாய விலை கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரையை தின்று சேதப்படுத்தின.

காட்டு யானைகள் வந்திருப்பதை அறிந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பல மணி நேரம் போராடி காட்டுயானைகளை விரட்டினர். காட்டு யானைகள் அருகில் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் இரவு நேரம் தங்கள் பகுதிக்கு வரும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது அய்யர்பாடி ரோப்வே. வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்த தேயிலைத் தோட்டத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. இவர்களின் தேவைக்காக நியாய விலை கடை இயங்கி வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இப்பகுதிக்கு வந்த 5 காட்டு யானைகள் தொழிலாளர் குடியிருப்புக்குள் உள்ள நியாய விலை கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரையை தின்று சேதப்படுத்தின.

காட்டு யானைகள் வந்திருப்பதை அறிந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பல மணி நேரம் போராடி காட்டுயானைகளை விரட்டினர். காட்டு யானைகள் அருகில் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் இரவு நேரம் தங்கள் பகுதிக்கு வரும் என்ற அச்சத்தில் உள்ளனர்.