அரசூர் கிராமசபை கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து அவதூறு பேசியதாக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு பதிவு

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட அரசூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட அரசூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை அரசூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.

இப்படியிருக்க இக்கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர்களும் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் முத்துலிங்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என வலியுறுத்தினார்.

மேலும், அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசூர் ஊராட்சி செயலாளர் சிவசாமி சூலூர் காவல் நிலையத்தில் அமைச்சர் குறித்து அவதூறு பேசியதாக புகார் அளித்தார்.

இதையடுத்து, கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட சூலூர் போலீசார் முத்துலிங்கத்தின் மீது தகாத வார்த்தையில் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...