கோவை: ஹைட்ரோ கார்பன் திட்டம்: நிறைவேற்றுவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை: ஹைட்ரோ கார்பன் திட்டம்: நிறைவேற்றுவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றுவது குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தலையில் கருப்பு துணியால் தலப்பாக்கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் மாநில அரசிடமும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமலேயே அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் தலையில் கருப்புத் துணியால் தலப்பாக்கட்டி நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தார்.
மேலும் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
மாநில அரசிடமும், மக்களிடமும் கருத்துகள் கேட்காமலே அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என மத்திய சுற்று சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றுவது குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தலையில் கருப்பு துணியால் தலப்பாக்கட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் மாநில அரசிடமும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமலேயே அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் தலையில் கருப்புத் துணியால் தலப்பாக்கட்டி நூதன முறையில் கோரிக்கை மனு அளித்தார்.
மேலும் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
மாநில அரசிடமும், மக்களிடமும் கருத்துகள் கேட்காமலே அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என மத்திய சுற்று சுழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.