கோவை: வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் புலி, சிறுத்தையை தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் புலி, சிறுத்தையை தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் புலி, சிறுத்தை, காட்டு யானைகள் உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் துர்நாற்றம் வீசுவதை அறிந்த தோட்ட காவலர்கள் அந்த பகுதியை பார்வையிட்டனர். அப்போது ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சிறுத்தையின் உடலை கைப்பற்றி வன உயிரின மேலாண்மை மையத்திற்கு கொண்டு வந்தனர். ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மாரிமுத்து இறந்த சிறுத்தையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அங்கு சிறுத்தை உடல் கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது, இறந்த சிறுத்தைக்கு வயது 2 என்றும் ஆண் சிறுத்தையை புலி தாக்கி கொன்று சாப்பிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள உடல் பாகங்கள் எரியூட்டப்பட்டன. தேயிலை தோட்டத்தில் புலி, சிறுத்தையை தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் புலி, சிறுத்தை, காட்டு யானைகள் உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த வெள்ளமலை மட்டம் தேயிலை தோட்டத்தில் துர்நாற்றம் வீசுவதை அறிந்த தோட்ட காவலர்கள் அந்த பகுதியை பார்வையிட்டனர். அப்போது ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சிறுத்தையின் உடலை கைப்பற்றி வன உயிரின மேலாண்மை மையத்திற்கு கொண்டு வந்தனர். ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மாரிமுத்து இறந்த சிறுத்தையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அங்கு சிறுத்தை உடல் கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது, இறந்த சிறுத்தைக்கு வயது 2 என்றும் ஆண் சிறுத்தையை புலி தாக்கி கொன்று சாப்பிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தையின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள உடல் பாகங்கள் எரியூட்டப்பட்டன. தேயிலை தோட்டத்தில் புலி, சிறுத்தையை தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.