கோவை: நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன் எனவும் பாஜக வலையில் அவர் சிக்கமாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை: நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன் எனவும் பாஜக வலையில் அவர் சிக்கமாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியினை ஏற்றிவைத்து கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ். அழகிரி, பல நாடுகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற நாட்டை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது எனவும் நாட்டை பல தேசங்களாக உடைக்க பாஜக முயற்சிக்கிறது என தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை செயல்படுத்தும் பாஜகவினால் இந்தியாவின் சுதந்திரத்திற்கும், குடியரசிற்கும் பாதிப்பு வந்துள்ளது என்றார்.
பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி எனவும் நடிகர் ரஜினிகாந்த் பாஜக சார்பாக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது என கூறிய அவர், பெரியாரை விமர்சித்த நடிகர் ரஜினிகாந்த் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது துக்ளக் பத்திரிக்கையில் கருப்பு அட்டை படத்தை வெளியிட்டு சோ பாஜகவை விமர்சித்ததை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன் எனவும் ரஜினிகாந்த் பாஜக வலையில் சிக்க மாட்டார் என்று கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கையான 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது எனவும் இது சமூக நீதிக்கு எதிரான கல்வி முறை என்று கூறினார்.
மேலும், திறமை என்ற பெயரில் மனுதர்மத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது எனவும் 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது குலக்கல்வி திட்டம் எனவும் கூறிய அவர், பெரியார் பாதையை பின்பற்றி வந்த அதிமுக சார்பில் இப்பொதுத்தேர்வை ஏற்றுக்கொண்டது தவறு என தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமே இல்லை எனவும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கமே நடைபெறவில்லை எனவும் நீட் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடு அடைந்துள்ளதாகவும் மணல் வியாபாரம் மற்றும் சிமெண்ட் விற்பனையில் வெளிப்படையாக ஊழல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியினை ஏற்றிவைத்து கட்சியினருக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ். அழகிரி, பல நாடுகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற நாட்டை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது எனவும் நாட்டை பல தேசங்களாக உடைக்க பாஜக முயற்சிக்கிறது என தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை செயல்படுத்தும் பாஜகவினால் இந்தியாவின் சுதந்திரத்திற்கும், குடியரசிற்கும் பாதிப்பு வந்துள்ளது என்றார்.
பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி எனவும் நடிகர் ரஜினிகாந்த் பாஜக சார்பாக இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது என கூறிய அவர், பெரியாரை விமர்சித்த நடிகர் ரஜினிகாந்த் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது துக்ளக் பத்திரிக்கையில் கருப்பு அட்டை படத்தை வெளியிட்டு சோ பாஜகவை விமர்சித்ததை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில் நழுவுற மீன் எனவும் ரஜினிகாந்த் பாஜக வலையில் சிக்க மாட்டார் என்று கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கையான 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது எனவும் இது சமூக நீதிக்கு எதிரான கல்வி முறை என்று கூறினார்.
மேலும், திறமை என்ற பெயரில் மனுதர்மத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். முயற்சிக்கிறது எனவும் 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது குலக்கல்வி திட்டம் எனவும் கூறிய அவர், பெரியார் பாதையை பின்பற்றி வந்த அதிமுக சார்பில் இப்பொதுத்தேர்வை ஏற்றுக்கொண்டது தவறு என தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது சாத்தியமே இல்லை எனவும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் தமிழ்நாட்டில் ஒரு அரசாங்கமே நடைபெறவில்லை எனவும் நீட் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடு அடைந்துள்ளதாகவும் மணல் வியாபாரம் மற்றும் சிமெண்ட் விற்பனையில் வெளிப்படையாக ஊழல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.