உதகை அரசு கலைக் கல்லூரியில் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்..! மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி மரியாதை!

நீலகிரி: 71வது குடியரசு தின விழாவையொட்டி இன்று உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.


நீலகிரி: 71வது குடியரசு தின விழாவையொட்டி இன்று உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.



நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தி இன்று குடியரசு தின விழா நடைபெறுகிறது.



இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் 71வது குடியரசு தின விழா உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.



தேசியக் கொடியை ஏற்றியபின் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், பின்னர் ரூ.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அரசு அலுவலர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் சான்றுகள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.



இந்த விழாவில் நீலகிரி மாவட்ட பழங்குடி இன மக்களான தோடர் இன பெண்களின் பாரம்பரிய நடனமும் மற்றும் படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும் இடம்பெற்றன. மேலும் குடியரசை போற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...