திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கொண்டாடப்பட்ட 71வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியேற்றி 515 பயனாளிகளுக்கு ரூ.93.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கொண்டாடப்பட்ட 71வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியேற்றி 515 பயனாளிகளுக்கு ரூ.93.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாட்டின் 71வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. சரியாக காலை 8 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், தொடர்ந்து திறந்த ஜீப்பில் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும், முதலமைச்சர் பதக்கங்கள் மொத்தம் 55 போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் 239 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். இதையடுத்து, 515 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 47 ஆயிரத்து 162 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் எஸ்.பி., திஷா மிட்டல், மாநகர போலீஸ் ஆணையர் சஞ்சய் குமார், மாநகர துணை ஆணையர் பத்ரி நாராயணன், டி.ஆர்ஓ. சுகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகளும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாட்டின் 71வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. சரியாக காலை 8 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், தொடர்ந்து திறந்த ஜீப்பில் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும், முதலமைச்சர் பதக்கங்கள் மொத்தம் 55 போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் 239 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். இதையடுத்து, 515 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 47 ஆயிரத்து 162 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் எஸ்.பி., திஷா மிட்டல், மாநகர போலீஸ் ஆணையர் சஞ்சய் குமார், மாநகர துணை ஆணையர் பத்ரி நாராயணன், டி.ஆர்ஓ. சுகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகளும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.