மேட்டுப்பாளையத்தில் சரக்கு லாராயும் காரும் மோதிய விபத்தில் லாரி தீபற்றி எரிந்து ஒருவர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கல்லார் தூரிப்பாலம் அருகே காரும் சரக்கு லாரியும் மோதிய விபத்தில் லாரி தீ பற்றியது. இதில் லாரியில் பயணித்த லாரி கிளீனர் தீயில் கருகி உயிரிழந்தார்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கல்லார் தூரிப்பாலம் அருகே காரும் சரக்கு லாரியும் மோதிய விபத்தில் லாரி தீ பற்றியது. இதில் லாரியில் பயணித்த லாரி கிளீனர் தீயில் கருகி உயிரிழந்தார்.

நீலகிரி மவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த சரக்கு லாரியும் திருப்பூரில் இருந்து உதகைக்கு நோக்கி சென்ற காரும் கல்லாரில் நேருக்கு நேர் மோதிவிபத்து ஏற்பட்டது. இதில் காரின் மீது மோதிய லாரி நிலை தடுமாறி மீண்டும் அருகில் இருந்த மரத்தின் மீதும் மோதியது, இதில் லாரி திடீரென தீ பிடித்து மள மளவென பற்றி எரியத்துவங்கியது. 

விபத்தில் லாரி ஓட்டுநர் குதித்து தப்பிய நிலையில் உடன் வந்த கிளீனர் கால் லாரியில் மாட்டிகொண்டது, அவர் வெளியேறாத  முடியாததால் லாரியில் ஏற்பட்ட தீயில் உடல் முழுவதும் கருகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் காரில் பயணித்த திருப்பூரை சேர்ந்த நந்தகுமார், ராஜேஷ், முத்துரத்தினம் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் தலைமறைவாகியதால் உயிரிழந்தவரின் விபரம் தெரியவில்லை. விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...