கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள திருநெல்வேலி நம்பிராயர் கோவில் யானை குருங்குடி வள்ளிக்கு வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள திருநெல்வேலி நம்பிராயர் கோவில் யானை குருங்குடி வள்ளிக்கு வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து 28 கோவில் யானைகள் இந்த முகாமில் பங்குபெற்றுள்ள நிலையில் முகாமில் யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
யானைகள் உடல் எடைக்கு ஏற்றவாறு தீவன கட்டுப்பாடுகள், நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களில் சிமெண்ட் தரைகளிலும், கல் தளங்களில் கட்டி வைக்கப்படும் யானைகளுக்கு சிறு சிறு புண்கள் உள்ளன.

எனவே, அதனை கண்டறிந்து காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஏழு பேர் கொண்ட மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு யானைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இம்முகாமில் பங்கேற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம் அழகிய நம்பிராயர் கோவில் யானை குறுங்குடி வள்ளி யானைக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் அந்த யானைக்கு மருத்துவக்குழுவினர் இன்று சிகிச்சை அளித்தனர். யானையை படுக்க வைத்து பாகன் உதவியுடன் காயமடைந்த பகுதியில் ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகள் கொண்டு சுத்தம் செய்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன.
பொதுவாக யானைகள் தரையில் படுத்து உறங்கும் போது அதன் வயிற்று பகுதிகளில் இதுமாதிரியான புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் யானையின் காயத்திற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் அதனை தொடர்ந்து கண்காணித்து தேவையான மருந்துகளை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து 28 கோவில் யானைகள் இந்த முகாமில் பங்குபெற்றுள்ள நிலையில் முகாமில் யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
யானைகள் உடல் எடைக்கு ஏற்றவாறு தீவன கட்டுப்பாடுகள், நடைபயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களில் சிமெண்ட் தரைகளிலும், கல் தளங்களில் கட்டி வைக்கப்படும் யானைகளுக்கு சிறு சிறு புண்கள் உள்ளன.

எனவே, அதனை கண்டறிந்து காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஏழு பேர் கொண்ட மருத்துவக்குழு நியமிக்கப்பட்டு யானைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இம்முகாமில் பங்கேற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம் அழகிய நம்பிராயர் கோவில் யானை குறுங்குடி வள்ளி யானைக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் அந்த யானைக்கு மருத்துவக்குழுவினர் இன்று சிகிச்சை அளித்தனர். யானையை படுக்க வைத்து பாகன் உதவியுடன் காயமடைந்த பகுதியில் ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகள் கொண்டு சுத்தம் செய்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டன.
பொதுவாக யானைகள் தரையில் படுத்து உறங்கும் போது அதன் வயிற்று பகுதிகளில் இதுமாதிரியான புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் யானையின் காயத்திற்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் அதனை தொடர்ந்து கண்காணித்து தேவையான மருந்துகளை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.