வால்பாறையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி; 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியின் முன் புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக கல்லூரி வாசல் முன் வால்பாறை வட்டாட்சியர் வெங்கடாசலம் உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

கல்லூரி முன் துவங்கிய பேரணி காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், மார்க்கெட் வழியாக வந்து மீண்டும் கல்லூரியில் முடிவுற்றது. இந்த ஊர்வலத்தில் வந்த மாணவர்கள் வாக்களிப்பது நமது கடமை,18 வயது பூர்த்தியானவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மேலும், வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துக்கூறும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர்.

இந்த பேரணியில் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன், வட்டாட்சியர் வெங்கடாசலம், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் மூர்த்தி வருவாய்த்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...