கோவையில் தொழிலாளிகளின் பிஎஃப் பணத்தை தனது கணக்குக்கு மாற்றிய மனிதவள மேம்பாட்டு அதிகாரி கைது

கோவை: கோவை சிறுமுகை அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளிகளின் வைப்பு நிதியை ஏமாற்றி தனது கணக்குக்கு மாற்றிய மனிதவள மேம்பாட்டு அதிகாரியை கோவை பந்தய சாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை சிறுமுகை அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளிகளின் வைப்பு நிதியை ஏமாற்றி தனது கணக்குக்கு மாற்றிய மனிதவள மேம்பாட்டு அதிகாரியை கோவை பந்தய சாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை அடுத்த சிறுமுகை பகுதியில் எஸ்பி அஃப்பியரன்ஸ் என்ற தனியார் பனியன் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் மனித வள மேம்பாட்டுப் பிரிவு அலுவலராக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், பிரகாஷ் கடந்த சில மாதங்களாகவே தொழிலாளர்களின் வைப்பு நிதியை தன் கணக்குக்கு மாற்றி மோசடி செய்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலர் வேல்ராஜ் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 



இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட பிரகாஷை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரூபாய்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...