கோவை: கோவை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்திமதி மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமுல் கந்தசாமி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கோவை: கோவை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்திமதி மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமுல் கந்தசாமி ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
சூலூர் 7வது வார்டு மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் மனைவி சாந்திமதி(55) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல, அன்னூர் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கோவை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்திமதி மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமுல் கந்தசாமி ஆகியோர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மாவட்ட தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவருக்கான அறையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, எம்.எல்.ஏ.க்கள் ஆறுகுட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சூலூர் 7வது வார்டு மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் மனைவி சாந்திமதி(55) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல, அன்னூர் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கோவை மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்திமதி மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமுல் கந்தசாமி ஆகியோர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மாவட்ட தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவருக்கான அறையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, எம்.எல்.ஏ.க்கள் ஆறுகுட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.