நீலகிரியில் ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வாரவிழா; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஜனவரி 24 முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள மனித நேய வாரவிழாவை இன்று உதகையிலுள்ள பிரிக்ஸ் பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஜனவரி 24 முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள மனித நேய வாரவிழாவை இன்று உதகையிலுள்ள பிரிக்ஸ் பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறும்போது;-

பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் அரசு மூலம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இதில் சுயதொழில் புரியும் பழங்குடியினருக்கு வங்கிக்கடன் ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் இந்த வாரவிழா இறுதி நாளில் அதற்கான ஏற்பாடுகளை இங்குள்ள அலுவலர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், பழங்குடியினரின் வாழ்வியல் முறைகளையும் கலாச்சாரங்களையும் காணும் வகையில் இந்த வார விழா இடம் பெற்றிருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் அரசுத் துறைகளைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்படுத்தும் பொருட்களை காட்சிப்படுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...