கோவை: பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரஜினியின் உருவப்படத்தை கிழித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரஜினியின் உருவப்படத்தை கிழித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் 1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது ராமர், சீதை உருவங்களை உடையின்றி எடுத்து வந்து செருப்பால் அடித்தாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தபெதிக, திவிக, விசிக, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, ரஜினியின் உருவப்படத்தை கிழித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கில் நடிகர் ரஜினிகாந்த் ஆதாரமற்ற கருத்தினை கூறியிருப்பதாகவும் அவரது கருத்தினை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் 1971ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டின் போது ராமர், சீதை உருவங்களை உடையின்றி எடுத்து வந்து செருப்பால் அடித்தாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தபெதிக, திவிக, விசிக, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, ரஜினியின் உருவப்படத்தை கிழித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கில் நடிகர் ரஜினிகாந்த் ஆதாரமற்ற கருத்தினை கூறியிருப்பதாகவும் அவரது கருத்தினை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.