கோவையில் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்ட தீத்திபாளையம் ஊராட்சி தலைவர்..!

கோவை: கோவையில் தீத்திபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் தனது ஊரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டது அந்த ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


கோவை: கோவையில் தீத்திபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் தனது ஊரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டது அந்த ஊர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கோவை தீத்திபாளையம் ஊராட்சிக்கு தலைவராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புல்லட் கந்தசாமி. இவர் தேர்தல் வாக்குறுதியாக பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக தூய்மையான ஊராக மாற்றுவேன் என உறுதியளித்திருந்தார்.



இந்நிலையில், தமது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தீத்திப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுடன் சென்ற இவர், நேரடியாக சாக்கடைகளில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். இவரது இந்த செயலை பார்த்த ஊர் மக்கள் அவரை வெகுவாக பாராட்டி சென்றனர்.



மேலும், தமிழகத்திலேயே வரி பாக்கியில்லா, பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், இந்த பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக தீத்திபாளையம் ஊராட்சியை விரைவில் மாற்றி காட்டுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்கு முன்பும் இவர் தான் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...