பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை தாக்கல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், அந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அடிதடி வழக்கையும் விசாரித்து வந்த சிபிஐ, தற்போது அடிதடி வழக்கின் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாகவும், அந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அடிதடி வழக்கையும் விசாரித்து வந்த சிபிஐ, தற்போது அடிதடி வழக்கின் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாவட்ட காவலர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அரசியல் தலையீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதால் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ, பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இதில் ஒன்றாக பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார் அளித்த பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த அடிதடி வழக்கையும் சிபிஐ விசாரித்து வந்தது.

இந்த நிலையில், அடிதடி வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறுதி வாதம் நடைபெற்று தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...