திருப்பூரில் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூரில் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் தொழிலாளி கண்ணன். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஒரு வயது குழந்தை இருந்த நிலையில், பாண்டியம்மாள் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, குழந்தை கனிஷ்கா வீட்டின் வெளியே வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பாண்டியம்மாள் வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். 



பதற்றத்துடன் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடிய போது வீட்டு வளாகத்தில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த வாளியில் குழந்தை கனிஷ்கா மூச்சு திணறியபடி கிடந்தாள்.



 உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.



குழந்தையின் உடலை பார்த்து தாய் பாண்டியம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...