கோவை: கோவை கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் வருவாய்த்துறை இயக்குனராக அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் வேலூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 9.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் வருவாய்த்துறை இயக்குனராக அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் வேலூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 9.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை புறவழிச்சாலை வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக கோவை வருவாய் துறை இயக்குனராக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு அதிகாரிகள் கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேலூரில் இருந்து வந்த லாரி ஒன்றை மடக்கிப்பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டதில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த வேலூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்த அதிகாரிகள் கடத்திவரப்பட்ட 4,27,95,000 ரூபாய் மதிப்புள்ள 9.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், ராஜ்குமாரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வருவாய்த்துறை இயக்குனரக அதிகாரிகள், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை புறவழிச்சாலை வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக கோவை வருவாய் துறை இயக்குனராக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு அதிகாரிகள் கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேலூரில் இருந்து வந்த லாரி ஒன்றை மடக்கிப்பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டதில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த வேலூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்த அதிகாரிகள் கடத்திவரப்பட்ட 4,27,95,000 ரூபாய் மதிப்புள்ள 9.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், ராஜ்குமாரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வருவாய்த்துறை இயக்குனரக அதிகாரிகள், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.