கோவை: இந்தியன் வங்கி சாரிபில் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதிய ஏ.டி.எம் மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
கோவை: இந்தியன் வங்கி சாரிபில் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதிய ஏ.டி.எம் மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள். கடந்த காலங்களில் இவர்களுக்கு மாத சம்பளம் தேயிலை தோட்ட அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இவர்கள் அனைவருக்கும் வங்கி மூலமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்ட பணியாளர்கள் அரசு ஊழியர்கள் வியாபாரிகள் ஓய்வூதியதாரர்கள் உட்பட ஏராளமானவர்கள் வங்கி பண பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர். ஆனால், வால்பாறையில் இன்றுவரை மூன்று ஏ.டி.எம் மையங்கள் மட்டுமே உள்ள நிலையில் பணம் எடுப்பதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு அதிகப்படியான ஏ.டி.எம் மையங்களை அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று இந்தியன் வங்கி சாரிபில் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதிய ஏ.டி.எம் மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த புதிய ஏ.டி.எம்மை வால்பாறை இந்தியன் வங்கி கிளை மேலாளர் யுவராஜ் துவக்கி வைத்தார்.

விழாவில் உதவி கிளை மேலாளர் காளியப்பன் அலுவலர்கள் மற்றும் வியாபார பெருமக்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக விரைவில் பணம் எடுக்க வசதி ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள். கடந்த காலங்களில் இவர்களுக்கு மாத சம்பளம் தேயிலை தோட்ட அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இவர்கள் அனைவருக்கும் வங்கி மூலமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்ட பணியாளர்கள் அரசு ஊழியர்கள் வியாபாரிகள் ஓய்வூதியதாரர்கள் உட்பட ஏராளமானவர்கள் வங்கி பண பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர். ஆனால், வால்பாறையில் இன்றுவரை மூன்று ஏ.டி.எம் மையங்கள் மட்டுமே உள்ள நிலையில் பணம் எடுப்பதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு அதிகப்படியான ஏ.டி.எம் மையங்களை அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று இந்தியன் வங்கி சாரிபில் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதிய ஏ.டி.எம் மையம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த புதிய ஏ.டி.எம்மை வால்பாறை இந்தியன் வங்கி கிளை மேலாளர் யுவராஜ் துவக்கி வைத்தார்.

விழாவில் உதவி கிளை மேலாளர் காளியப்பன் அலுவலர்கள் மற்றும் வியாபார பெருமக்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக விரைவில் பணம் எடுக்க வசதி ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.