ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும் - திருப்பூரில் அர்ஜூன் சம்பத் பேட்டி

திருப்பூர்: ஓ.பி.எஸ்.சை திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது எனவும், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் திராவிட மாயையை ஒழித்து விடும் என்று திருப்பூரில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

திருப்பூர்: ஓ.பி.எஸ்.சை திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது எனவும், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் திராவிட மாயையை ஒழித்து விடும் என்று திருப்பூரில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். 

திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க திருப்பூர் வந்த அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் ஆன்மிக அரசியல் கொள்கைகள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது எனவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், துக்ளக் விழாவில் பேசும்போது, 1971 வது ஆண்டு, ராமர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை பேசியதை திராவிடர் கழகத்தினர் எதிர்க்கிறார்கள். 

இந்த சம்பவத்தை ஏன் நடத்தியவர்கள் மறுக்க வேண்டும்."

ரஜினிகாந்துக்கு ஆதரவு பெருகுவதால், அவருக்கு எதிராக ஒரு சில ஈ.வே.ரா இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தினர். வழக்கு போடுவதாக மிரட்டினார்கள். இதற்கு, அவர் அஞ்சப்போவதில்லை. ஆதாரங்களை காட்டி, மன்னிப்பு கேட்க முடியாது என அவர் மறுத்து விட்டார், என கூறினார். 

"ரஜினிகாந்துக்கு முழுமையான ஆதரவை தெரிவிக்கிறேன். தி.க வின் வக்கிர செயல்பாடுகளை கண்டிக்கிறேன். மேலும், ரஜினிக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்", என கோரிக்கை வைத்தார். 

"ஓ.பி.எஸ்., நல்ல கடவுள் பக்தர். அவரைக்கூட திராவிட மாயை ஆட்கொண்டு விட்டது. உண்மையில் அவர் ஈவேரா கொள்கை கொண்டவர் அல்ல. ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும்", என தெரிவித்தார். 

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை குறித்து பேசிய அவர், "திமுக ஆட்சி காலத்தில் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா நடந்த போது, சிவாகம முறைப்படி தான் நடைபெற்றது. குடமுழுக்கு நடத்த மொழி முக்கியமல்ல. மகுடாகமம் என்பதே தமிழ் முறை தான். இதில் குழப்பம் ஏற்படுத்தவே தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என சிலர் தெரிவிக்கிறார்கள். இந்த குழப்பங்களுக்கு தமிழக அரசு பணிந்து போக கூடாது."

கள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என தெரிவித்த அவர், கச்சத்தீவில் குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...