கோவை: கோவை மாநகராட்சியில் தூய்மைக்கான கணக்கெடுப்பு 2020 பணியில் பொதுமக்கள் அனைவரும் ஜனவரி 31ம் தேதி வரை கருத்துக்களை பதிவு செய்யலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியில் தூய்மைக்கான கணக்கெடுப்பு 2020 பணியில் பொதுமக்கள் அனைவரும் ஜனவரி 31ம் தேதி வரை கருத்துக்களை பதிவு செய்யலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கூட்டரங்கில் ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெறுகிற தூய்மைக்கான கணக்கெடுப்பு 2020 பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆப்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது;-
நாடு முழுவதும் 04.01.2020 முதல் 31.01.2020 வரை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அனைத்து நகரங்களையும் தூய்மையின் அடிப்படையில் தரவரிசை கண்டறியவும் ஸ்வச் சரவேஷன் 2020 இந்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மூலம் நடத்தப்படுகிறது.
எனவே, கோவை மாநகராட்சியின் பொதுமக்கள் அனைவரும் கோவை மாநகரின் தூய்மைக்கான தங்களின் வாக்குகளை 1969 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், கைபேசியில் Swachh Survekshan 2020 (APP) செயலி வாயிலாகவும், http://swachhsurvekshan2020.org/CitizenFeedback என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் எனவும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, செந்தில்குமார்ரத்தினம், மகேஷ்கனகராஜ், ஏ.ஜே.செந்தில்அரசன், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை உதவி ஆணையர் (பணியமைப்பு) ம.சுந்தாராஜன், உதவி ஆணையர் (கணக்கு) சரவணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், தூய்மை பாரத இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கூட்டரங்கில் ஜனவரி 04 முதல் 31 வரை நடைபெறுகிற தூய்மைக்கான கணக்கெடுப்பு 2020 பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆப்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது;-
நாடு முழுவதும் 04.01.2020 முதல் 31.01.2020 வரை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அனைத்து நகரங்களையும் தூய்மையின் அடிப்படையில் தரவரிசை கண்டறியவும் ஸ்வச் சரவேஷன் 2020 இந்திய அரசாங்கத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மூலம் நடத்தப்படுகிறது.
எனவே, கோவை மாநகராட்சியின் பொதுமக்கள் அனைவரும் கோவை மாநகரின் தூய்மைக்கான தங்களின் வாக்குகளை 1969 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், கைபேசியில் Swachh Survekshan 2020 (APP) செயலி வாயிலாகவும், http://swachhsurvekshan2020.org/CitizenFeedback என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் எனவும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, செந்தில்குமார்ரத்தினம், மகேஷ்கனகராஜ், ஏ.ஜே.செந்தில்அரசன், உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை உதவி ஆணையர் (பணியமைப்பு) ம.சுந்தாராஜன், உதவி ஆணையர் (கணக்கு) சரவணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், தூய்மை பாரத இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.