பொள்ளாச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் மோசடி..! நகை அடகு கடை மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நகை அடகு நிறுவனத்தில் கூடுதலாக நிர்வாகத்திற்கு கணக்கு காட்டி பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்த சம்பவத்தில் மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நகை அடகு நிறுவனத்தில் கூடுதலாக நிர்வாகத்திற்கு கணக்கு காட்டி பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்த சம்பவத்தில் மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பூரம் ஃபின்சர்வ் நகை அடகு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான கிளை நிறுவனம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இயங்கி வருகிறது. இந்த கிளையில் கடந்த சில மாதங்களாகவே கணக்குகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த தொகையை கொடுத்துவிட்டு நிறுவனத்தின் கணக்கில் அதிக தொகை பதிவு செய்வதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வட்டார மேலாளர் தயானந்தன் அளித்த புகாரின் பேரில், கிளை மேலாளர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த லட்சுமி, நகை மதிப்பீட்டாளர் பாலக்காட்டைச் சேர்ந்த பிஜூ ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாடிக்கையாளர்களின் 5081 கிராம் தங்க நகைகளில், 4650 கிராம் மட்டும் இருந்ததும், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1150 கிராம் தங்க நகைகள் மாயமானதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குற்றத்தில் தொடர்புடைய அதே கிளை நிறுவனத்தைச் சேர்ந்த சுபா, விக்னேஷ் ஆகிய இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...