கோவையில் பாலின விகிதாச்சார வருடாந்திர வரவு செலவு திட்டம்‌ குறித்த மூன்று நாள்‌ பயிற்சி தொடக்கம்

கோவை: கோவை சரக பணியிடை பயிற்சி மையம்‌ மற்றும்‌ பாரதியார்‌ பல்கலைக்கழகம்‌ இணைந்து காவல்துறையில்‌ பணிபுரியும்‌ காவலர்கள்‌ மற்றும்‌ அதிகாரிகளுக்கு பாலின விகிதாச்சார வருடாந்திர வரவு செலவு திட்டம்‌ (Gender Budgeting) சம்பந்தமாக மூன்று நாள்‌ பயிற்சியின்‌ தொடக்க விழா இன்று கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில்‌ (In-service Training Centre) நடைபெற்றது.


கோவை: கோவை சரக பணியிடை பயிற்சி மையம்‌ மற்றும்‌ பாரதியார்‌ பல்கலைக்கழகம்‌ இணைந்து காவல்துறையில்‌ பணிபுரியும்‌ காவலர்கள்‌ மற்றும்‌ அதிகாரிகளுக்கு பாலின விகிதாச்சார வருடாந்திர வரவு செலவு திட்டம்‌ (Gender Budgeting) சம்பந்தமாக மூன்று நாள்‌ பயிற்சியின்‌ தொடக்க விழா இன்று கோவை சரக பணியிடை பயிற்சி மையத்தில்‌ (In-service Training Centre) நடைபெற்றது.

இதில்‌ கோவை சரக காவல்துறை துணைத்தலைவர்‌ க.கார்த்திகேயன்‌ துவக்கி வைத்து பயிற்சியாளர்களுக்கு பயிற்சி சம்மந்தமாகவும்‌, பாலின சமன்பாடு குறித்தும்‌ அறிவுரை வழங்கினார்‌. இந்த மூன்று நாள்‌ பயிற்சியில்‌ பாரதியார்‌ பல்கலைக்கழக மகளிரியல்‌ துறை பேராசிரியர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்கள்‌ மூலம்‌ பாலின சமன்பாடு, பாலின ரீதியான நிதி பங்கீடு பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான பல்வேறு வகையான நலத்திட்டங்கள்‌ சம்மந்தாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.



இவ்விழாவில்‌ பாரதியார்‌ பல்கலைக்கழக மகளிரியல்‌ துறைத்‌ தலைவர்‌ முனைவர்‌.ஜெனிட்டா ரோசலின்‌, பொருளாதார துறை பேராசிரியர்‌, முனைவர்‌ ஏ.சங்கமித்ரா பணியிடை பயிற்சி மைய துணைக்காவல்‌ கண்காணிப்பாளர்‌ நாகராஜன்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

இந்த நிகழ்ச்சியின்‌ இறுதியில்‌ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும்‌, உதவி பேராசிரியருமான முனைவர்‌.கே.மங்கையர்கரசி நன்றியுரை வழங்கினார்‌. இப்பயிற்சி வகுப்பில்‌ கோவை சரகத்திற்குட்பட்ட கோயம்புத்தூர்‌, ஈரோடு, திருப்பூர்‌, நீலகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மாநகரத்தை சேர்ந்த 44 காவல்‌ அதிகாரிகள்‌ பயிற்சியில்‌ பங்கேற்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...