கோவை: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொண்டு போனார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
இது திராவிட சிந்தனையாளர்கள் மத்தியில் ரஜினி மீது எதிர்ப்பாக கிளப்பியது. அதேபோல சமூக வலைதளங்களில் ரஜினியின் பேச்சு விஷமம் உள்ளது எனவும் பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது எனவும் கண்டனங்கள் கிளம்பியது.
இந்த நிலையில், கடந்த 17ம் தேதி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகரத் தலைவர் நேரு தாஸ் புகார் மனு ஒன்று அளித்தார். இதை தொடர்ந்து புகார் மனு தொடர்பாக காட்டூர் போலீசார், புகார்தாரர் நேரு தாஸிடம் சி.எஸ்.ஆர் அளித்தனர். ஆனால், இதுவரை முதல் தகவல் அறிக்கை பதியப்படாததால் புகார்தாரர் நேரு தாஸ் உயர்நீதிமன்றத்தில் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். கோவை காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் ஐம்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் கொண்டு போனார்கள் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
இது திராவிட சிந்தனையாளர்கள் மத்தியில் ரஜினி மீது எதிர்ப்பாக கிளப்பியது. அதேபோல சமூக வலைதளங்களில் ரஜினியின் பேச்சு விஷமம் உள்ளது எனவும் பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது எனவும் கண்டனங்கள் கிளம்பியது.
இந்த நிலையில், கடந்த 17ம் தேதி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகரத் தலைவர் நேரு தாஸ் புகார் மனு ஒன்று அளித்தார். இதை தொடர்ந்து புகார் மனு தொடர்பாக காட்டூர் போலீசார், புகார்தாரர் நேரு தாஸிடம் சி.எஸ்.ஆர் அளித்தனர். ஆனால், இதுவரை முதல் தகவல் அறிக்கை பதியப்படாததால் புகார்தாரர் நேரு தாஸ் உயர்நீதிமன்றத்தில் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் காட்டூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். கோவை காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.