கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் பகுதியில் உள்ள மீனாட்சி கார்டனில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்புக்களை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடன் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கோவை: கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் பகுதியில் உள்ள மீனாட்சி கார்டனில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்புக்களை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடன் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட துடியலூர் காவல் எல்லையில் உள்ள மீனாட்சி கார்டனில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புகளில் சமீபகாலமாக காலணிகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் மர்மமாக திருட்டுப் போய் வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பல்வேறு குடியிருப்பில் இருந்து ஓரே நேரத்தில் உள்ளாடைகளும் செருப்புகளும் காணாமல் போனதை அடுத்து தேடி பார்த்த போது ஆளில்லாத ஒரு வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி மீண்டும் இது போன்று பெண்களின் உள்ளாடைகள், செருப்பு போன்றவை திருடப்பட்டது. இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடன் வந்து திருடி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.