கோவை: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 2ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடத்த இருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
கோவை: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 2ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடத்த இருந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வருகின்ற 02.02.2020 ஆம் தேதி கோவை வ.உ.சி., மைதானத்திலிருந்து, கொடிசியா வரை பேரணி நடத்த அனுமதி கோரி, கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் என்பவர் மனு கொடுத்திருந்தார்.
மேற்படி மனு குறித்து முஸ்லீம் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து ஜமாஅத்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மனித சங்கிலி அணிவகுப்பு, துண்டுபிரசுரம் விநியோகம், கடையடைப்பு போராட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் போன்ற 50க்கும் மேற்பட்ட போராட்டங்கள் மாநகரின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. மேலும் வருகின்ற 02.02.2020 ஆம் தேதி நடத்திட அனுமதி கோரியுள்ள அவினாசி சாலை மாநகரின் அதிகப்படியான போக்குவரத்து பயன்பாடுள்ள சாலை எனவும் மேம்பாலப் பணிகளால் அனைத்து வாகனங்களும் அவிநாசி ரோட்டை பயன்படுத்தி வருகின்றன. உயர் நீதிமன்றம், அனைத்து விதமான போராட்டங்களும் புறநகரில் நடத்தப்பட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. அவிநாசி ரோட்டில் பேரணி நடத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டு, பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வருகின்ற 02.02.2020 ஆம் தேதி கோவை வ.உ.சி., மைதானத்திலிருந்து, கொடிசியா வரை பேரணி நடத்த அனுமதி கோரி, கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் என்பவர் மனு கொடுத்திருந்தார்.
மேற்படி மனு குறித்து முஸ்லீம் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து ஜமாஅத்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மனித சங்கிலி அணிவகுப்பு, துண்டுபிரசுரம் விநியோகம், கடையடைப்பு போராட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் போன்ற 50க்கும் மேற்பட்ட போராட்டங்கள் மாநகரின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. மேலும் வருகின்ற 02.02.2020 ஆம் தேதி நடத்திட அனுமதி கோரியுள்ள அவினாசி சாலை மாநகரின் அதிகப்படியான போக்குவரத்து பயன்பாடுள்ள சாலை எனவும் மேம்பாலப் பணிகளால் அனைத்து வாகனங்களும் அவிநாசி ரோட்டை பயன்படுத்தி வருகின்றன. உயர் நீதிமன்றம், அனைத்து விதமான போராட்டங்களும் புறநகரில் நடத்தப்பட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. அவிநாசி ரோட்டில் பேரணி நடத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டு, பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.