கோவை: துக்ளக் விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு திமிர் தனமானது எனவும் அவதூறு பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் ரஜினிகாந்த்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.
கோவை: துக்ளக் விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்ற நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு திமிர் தனமானது எனவும் அவதூறு பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் ரஜினிகாந்த்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே முதன் முதலாக 350 அடி உயரத்திற்கு அம்பேத்காருக்கு சிலை அமைக்க உத்தரவிட்டுள்ள மகாராஷ்டிரா அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும், பெரியாரை பற்றி ரஜினிகாந்த் அவதூறாகப் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியவர், அவதூறு பரப்பிய ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது திமிர் தனமானது எனவும் அவதூறு பேச்சு திரும்பப் பெற வில்லை என்றால் ரஜினிகாந்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வலுவான போராட்டம் நடத்தப்படும் என்றார்.
போராடுகின்ற சக்திகளை கிண்டலாக பார்ப்பதற்கான பலனை ரஜினிகாந்த் அனுபவிப்பார் என கூறிய அவர், இந்துத்துவ சக்திகளின் பேச்சை கேட்டு, அவர்களின் கைக்கூலியாக ரஜினிகாந்த் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். நடக்காத செய்தியை வெளியிட்ட இந்துத்துவா நாளிதழின் தவறான செய்திகளை ரஜினிகாந்த் பேசுகின்றார் என கூறிய அவர், திட்டமிட்டு பெரியாரை அவமானப்படுத்த வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும் என்று சொல்லப்பட்ட பாசிச கருத்தே ரஜினியின் பேச்சு எனவும் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே முதன் முதலாக 350 அடி உயரத்திற்கு அம்பேத்காருக்கு சிலை அமைக்க உத்தரவிட்டுள்ள மகாராஷ்டிரா அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும், பெரியாரை பற்றி ரஜினிகாந்த் அவதூறாகப் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியவர், அவதூறு பரப்பிய ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது திமிர் தனமானது எனவும் அவதூறு பேச்சு திரும்பப் பெற வில்லை என்றால் ரஜினிகாந்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வலுவான போராட்டம் நடத்தப்படும் என்றார்.
போராடுகின்ற சக்திகளை கிண்டலாக பார்ப்பதற்கான பலனை ரஜினிகாந்த் அனுபவிப்பார் என கூறிய அவர், இந்துத்துவ சக்திகளின் பேச்சை கேட்டு, அவர்களின் கைக்கூலியாக ரஜினிகாந்த் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். நடக்காத செய்தியை வெளியிட்ட இந்துத்துவா நாளிதழின் தவறான செய்திகளை ரஜினிகாந்த் பேசுகின்றார் என கூறிய அவர், திட்டமிட்டு பெரியாரை அவமானப்படுத்த வேண்டும், அவதூறு பரப்ப வேண்டும் என்று சொல்லப்பட்ட பாசிச கருத்தே ரஜினியின் பேச்சு எனவும் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார்.