குன்னூர் ஜிம்கானா கிளப் வளாகத்தில் புகுந்த காட்டெருமை கூட்டம்; தொழிலாளர்கள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் வளாகத்தில் இன்று காலை காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்ததால் அப்பகுதி தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் வளாகத்தில் இன்று காலை காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்ததால் அப்பகுதி தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னூர் பகுதி வனத்தையொட்டி உள்ள பகுதியாகும் இங்கு சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு தேடி குடியிருப்பு பகுதியில் வலம் வருவது வாடிக்கையான ஒன்றானது.



இந்நிலையில், ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் பகுதியில் காட்டெருமைகள் குட்டியுடன் நுழைந்ததால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், காட்டெருமைகள் சாலையில் வரும்பொழுது அப்பகுதியில் உள்ளவர்கள் ஆபத்தை உணராமல் காட்டெருமையின் அருகே சென்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் காட்டெருமை அருகில் செல்பி எடுப்பவர்களை தாக்கும் நிலை உள்ளது.



கடந்த சில மாதத்திற்கு முன்பு காட்டெருமையால் தாக்கப்பட்டு சிம்ஸ் பூங்கா அருகே சுற்றுலாப் பயணி மற்றும் நடைப்பயிற்சி சென்றவர் என இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே வனத்துறையினர் வனவிலங்கு அருகே சென்று செல்பி எடுப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் காட்டெருமைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...