திருப்பூர்: பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் இன்று காலை ரஜினியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.
திருப்பூர்: பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் இன்று காலை ரஜினியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக துக்ளக் நிகழ்ச்சியில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினியை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிட கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருப்பூர் ரயில்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் ரஜினியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.

ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார், போராட்டக்காரர்களிடம் இருந்த உருவ பொம்மையை பிடுங்கிச் சென்றனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் சுமார் 30 பேர் பேரவையின் மாவட்ட செயலாளர் வேந்தன் மகேஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக துக்ளக் நிகழ்ச்சியில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினியை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிட கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திருப்பூர் ரயில்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் ரஜினியின் உருவ பொம்மை எரிக்க முயற்சி செய்தனர்.

ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீசார், போராட்டக்காரர்களிடம் இருந்த உருவ பொம்மையை பிடுங்கிச் சென்றனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் சுமார் 30 பேர் பேரவையின் மாவட்ட செயலாளர் வேந்தன் மகேஷ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.