31வது சாலை பாதுகாப்பு வார விழாவின் இரண்டாம் நாள் வாக்கத்தான் நிகழ்ச்சி; 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை: 31வது சாலை பாதுகாப்பு வார விழாவின் இரண்டாம் நாள் வாக்கத்தான் நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை: 31வது சாலை பாதுகாப்பு வார விழாவின் இரண்டாம் நாள் வாக்கத்தான் நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று வாக்கத்தான் பேரணியை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் துவக்கி வைத்தார்.



இதில் இந்திய விமான படையினர், கங்கா நர்சிங் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, சி.ஐ.டி கல்லூரி, ராமகிருஷ்ண கலை அறிவியல் கல்லூரி, அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கம், அம்பாள் ஐ.டி.ஐ மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



வ.ஊ.சி மைதானத்தில் துவங்கிய இந்த பேரணி, அவினாசி சாலை வழியாக, குப்புசாமி நாயுடு மருத்துவமனை வரை சென்று மீண்டும் வ.ஊ.சி மைதானத்தை வந்து நிறைவு பெற்றது. இந்த பேரணியில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர்,வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல், தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல், தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...