திருப்பூரில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருப்பூர்: திருப்பூரில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூரில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



தமிழ்நாடு அரசு போக்குவரத்துறையின் சார்பில் ஆண்டு தோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு 31வது சாலை பாதுகாப்பு வார விழா இன்று முதல் வரும் 27ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படவுள்ளது. 



முதல் நாளான இன்று திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த பேரணியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் துவங்கி, நகரின் முக்கிய சாலைகளின் வழியாக பழைய மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தினை வந்தடைந்தது.



இந்த பேரணியில் காவல்துறையினர், போக்குவரத்துத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...