வால்பாறை நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைக்கும் சமூக விரோதிகள்..! புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி

கோவை: வால்பாறை நகராட்சி குப்பை கிடங்கில் சமூக விரோதிகளால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோவை: வால்பாறை நகராட்சி குப்பை கிடங்கில் சமூக விரோதிகளால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் குப்பை கிடங்கு ஸ்டான்மோர் சாலையில் உள்ளது. வால்பாறை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு சேமிக்கப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கின் அருகில் அரசு கலை அறிவியல் கல்லூரி, நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா கக்கன் காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.



இந்த குப்பை கிடங்கில் கொட்டப்படும் டயர்களில் உள்ள இரும்பு கம்பிகளை எடுப்பதற்காக சமூக விரோதிகள் தீ வைத்து விடுகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் சமூக விரோதிகளால் வைக்கப்பட்ட தீ எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

மேலும், அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள், குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் சுவாச நோய்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் செல்லும் மக்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர். குப்பைகளுக்கு தீ வைக்கும் நபர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...