கோவை: மேட்டுப்பாளையத்தில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
கோவை: மேட்டுப்பாளையத்தில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு சார்பில் 31வது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, விபத்தில்லா தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கும் வகையில் இன்று பல்வேறு இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட இரு சக்கர வாகனப் பேரணியில் மகளிர் சுய உதவிக் குழு, தமிழ்நாடு ஊர்காவல் படை, போக்குவரத்து காவல்துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கலந்து கொண்ட இந்த பேரணியை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், போக்குவரத்து ஆய்வாளர் மாலதி, போக்குவரத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.