நீலகிரி: குன்னூரில் ரேஷன் மற்றும் மளிகை கடை கதவுகளை உடைத்த காட்டு யானைகள் அரிசி மற்றும் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தின.
நீலகிரி: குன்னூரில் ரேஷன் மற்றும் மளிகை கடை கதவுகளை உடைத்த காட்டு யானைகள் அரிசி மற்றும் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தின.

குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம், டெரேமியா, குறியமலை பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக நான்கு காட்டு யானைகள் சுற்றித் திரிந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன.

இந்நிலையில், தூதூர்மட்டம் அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் கடைமட்டப்பகுதியில் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள ரேசன் கடை மற்றும் சிவதாசன் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடை கதவுகளை உடைத்து அரிசி மற்றும் உணவு பொருட்களை சேதப்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு முன்பு காட்டு யானைகள் அருகில் இருந்த தேயிலை எஸ்டேட் பகுதிகளுக்குள் சென்றன. தாெடரந்து காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உணவு தண்ணீருக்காக இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம், டெரேமியா, குறியமலை பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக நான்கு காட்டு யானைகள் சுற்றித் திரிந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன.

இந்நிலையில், தூதூர்மட்டம் அருகே உள்ள கிரேக்மோர் எஸ்டேட் கடைமட்டப்பகுதியில் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள ரேசன் கடை மற்றும் சிவதாசன் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடை கதவுகளை உடைத்து அரிசி மற்றும் உணவு பொருட்களை சேதப்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு முன்பு காட்டு யானைகள் அருகில் இருந்த தேயிலை எஸ்டேட் பகுதிகளுக்குள் சென்றன. தாெடரந்து காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உணவு தண்ணீருக்காக இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.