கோவை: கோவை அடுத்த வெள்ளலூர் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத வேறுபாடின்றி இலவச தையல் தொழிற்பயிற்சி மையத்துடன் சுயதொழில் செய்ய உதவும் நோக்குடனும், இலவச மருத்துவ சேவை மையத்துடன் கூடிய புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
கோவை: கோவை அடுத்த வெள்ளலூர் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் சாதி, மத வேறுபாடின்றி இலவச தையல் தொழிற்பயிற்சி மையத்துடன் சுயதொழில் செய்ய உதவும் நோக்குடனும், இலவச மருத்துவ சேவை மையத்துடன் கூடிய புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை நகரின் பல பகுதிகளிலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்கள் வெள்ளலூரில் அமைந்துள்ள தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டனர்.

அவர்கள் தங்களது மத ரீதியான அடிப்படைக் கடமைகளான தொழுகை, சிறுவர்களுக்கான மத்ரஸா போன்றவைகளை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இந்த பகுதியில் "மஸ்ஜிதுல் முஹாஜிரீன்" எனும் பெயரில் பள்ளிவாசல் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பள்ளிவாசலின் திறப்பு விழா பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ மற்றும் ஜனாப். ஹுசைன் தீனார் ஆகியோர் இந்த பள்ளிவாசலை திறந்து வைத்தனர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை நகரின் பல பகுதிகளிலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்கள் வெள்ளலூரில் அமைந்துள்ள தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் குடியமர்த்தப்பட்டனர்.

அவர்கள் தங்களது மத ரீதியான அடிப்படைக் கடமைகளான தொழுகை, சிறுவர்களுக்கான மத்ரஸா போன்றவைகளை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இந்த பகுதியில் "மஸ்ஜிதுல் முஹாஜிரீன்" எனும் பெயரில் பள்ளிவாசல் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பள்ளிவாசலின் திறப்பு விழா பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ மற்றும் ஜனாப். ஹுசைன் தீனார் ஆகியோர் இந்த பள்ளிவாசலை திறந்து வைத்தனர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.