அரசின் தரமான சொட்டு மருந்தை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுகோள் - அமைச்சர் எஸ் பி வேலுமணி

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவங்கி வைத்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவங்கி வைத்தார்.

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத பிரச்சினையை தடுக்கும் வகையில் அரசு சார்பில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்துகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அரசு அறிவித்த படி தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இதற்கான முகமானது இன்று காலை 7 மணிக்கு துவங்கியது தொடர்ந்து மாலை 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சொட்டு மருந்து முகாமை துவங்கி வைத்தார். மேலும் அவருடன் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி , மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.



இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயசித்ராவினை, அமைச்சர் வேலுமணி நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது ;- “சென்ற ஆண்டு 3.33 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.இந்த ஆண்டு 3.34 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கோவைமாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1202 மையங்களும், நகர்ப்புறங்களில் 379 மையங்களும் என மொத்தம் 1581 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 30 மையங்கள் மற்றும் 18 நடமாடும் மையங்கள் சிறப்பு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் போலியோ சொட்டுமருந்து வழங்கும் பணியில் 6536 பேர் ஈடுபட்டுள்ளனர்.அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது.

அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.”

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...