கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவை தெப்பக்குளம் மைதானம் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுகவின் நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாநகராட்சியை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்துவது, பொது ஒதுக்கீட்டு இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பை மேடாக மாற்றும் மாநகராட்சியின் முடிவிற்கு கண்டனம் தெரிவிப்பது, கோவை மாநகராட்சியின் குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து வரும் 31ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவை தெப்பக்குளம் மைதானம் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுகவின் நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாநகராட்சியை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்துவது, பொது ஒதுக்கீட்டு இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பை மேடாக மாற்றும் மாநகராட்சியின் முடிவிற்கு கண்டனம் தெரிவிப்பது, கோவை மாநகராட்சியின் குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து வரும் 31ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.