கோவையில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவை அன்னூர் பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை அன்னூர் பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி அன்னூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், தேரோட்டம் முடிந்து மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (22) வீட்டில் விடுவதாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். 

அப்போது, காட்டு வழியே உட்புகுந்து சோள காட்டிற்குள் சிறுமியை அழைத்துச் சென்ற நிலையில், ஏற்கனவே அங்கு காத்திருந்த காளிதாஸ் (26) என்ற இளைஞர் மற்றும் அரவிந்த் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு பக்கத்து காட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனையறிந்த அந்த இளைஞர்கள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் சிறுமியை மீட்ட பொதுமக்கள் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அரவிந்த் மற்றும் காளிதாஸ் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது போக்ஸோ சட்டம் 7 மற்றும் 8 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...