திருப்பூர்: திருப்பூர் அருகே சின்னக்கனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்த மத்திய புலனாய்வு போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே சின்னக்கனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்த மத்திய புலனாய்வு போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கனூர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு அதே பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள வீட்டை கேரளாவை சேர்ந்த சிலருக்கு வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த அந்த நபர்கள் வெள்ளை நிற கேன்களில் எரி சாராயம் தயாரித்து கேன்கள் மூலம் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், (மத்திய புலனாய்வு காவல் துறையினர் சேலம் மண்டலம்) போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இரவில் சின்னகன்னூர் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், கணேசன் என்பவர் தோட்டத்தில் வைத்து 450 கேன்களில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, வாடகைக்கு விடப்பட்ட இடத்தின் உரிமையாளர் கணேசனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கேரளாவை சேர்ந்த நபர்களை பிடிக்கவும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கனூர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு அதே பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள வீட்டை கேரளாவை சேர்ந்த சிலருக்கு வாடகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த அந்த நபர்கள் வெள்ளை நிற கேன்களில் எரி சாராயம் தயாரித்து கேன்கள் மூலம் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், (மத்திய புலனாய்வு காவல் துறையினர் சேலம் மண்டலம்) போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இரவில் சின்னகன்னூர் பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார், கணேசன் என்பவர் தோட்டத்தில் வைத்து 450 கேன்களில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, வாடகைக்கு விடப்பட்ட இடத்தின் உரிமையாளர் கணேசனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கேரளாவை சேர்ந்த நபர்களை பிடிக்கவும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.