கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) கோட்டம் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு 1781 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.3 கோடியே 76 லட்சத்து 86 ஆயிரம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) கோட்டம் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு 1781 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.3 கோடியே 76 லட்சத்து 86 ஆயிரம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய மண்டலங்களின் சார்பாக பொங்கல் திருவிழாவையொட்டி கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதில் கடந்த 10ம் தேதி கோவையிலிருந்து 15 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 16 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 27 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 10 பேருந்துகளும் என மொத்தம் 68 பேருந்துகள் இயக்கப்பட்டன. 11ம் தேதி கோவையிலிருந்து 28 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 7 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 42 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 10 பேருந்துகளும் என மொத்தம் 97 பேருந்துகள் இயக்கப்பட்டன.
12ம் தேதி கோவையிலிருந்து 25 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 20 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 41 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 26 பேருந்துகளும் என மொத்தம் 112 பேருந்துகள் இயக்கப்பட்டன. 13ம் தேதி கோவையிலிருந்து 43 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 14 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 65 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 15 பேருந்துகளும் என மொத்தம் 158 பேருந்துகள் இயக்கப்பட்டன.
14ம் தேதி கோவையிலிருந்து 391 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 24 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 283 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 268 பேருந்துகளும் என மொத்தம் 966 பேருந்துகள் இயக்கப்பட்டன. 15ம் தேதி கோவையிலிருந்து 90 சிறப்பு பேருந்துகளும், உதகையிலிருந்து 51 பேருந்துகளும், ஈரோட்டிலிருந்து 138 பேருந்துகளும், திருப்பூரிலிருந்து 101 பேருந்துகளும் என மொத்தம் 380 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் மூலம் கோவை மண்டலம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 18 ஆயிரமும், உதகை மண்டலம் ரூ. 42 லட்சத்து 57 ஆயிரமும், ஈரோடு மண்டலம் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 15 ஆயிரமும், திருப்பூர் மண்டலம் ரூ.82 லட்சத்து 95 ஆயிரம் என மொத்தம் கோலை கோட்டத்தில் 1781 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அதில் ரூ.3 கோடியே 76 லட்சத்து 86 ஆயிரம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் 21ம் தேதி வரை வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை கொண்டாடி திரும்பி வரும் பயணிகளுக்கு ஏதுவாக சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, தேனி ஆகிய பகுதிகளுக்கும், கோவை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், சென்னை மார்க்கமாகவும் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
அதே போல் மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், சென்னை மற்றும் பிற நகரங்களுக்கும் கோவை கோட்டம் சார்பாக 3000 நடைகள் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.