கோவை: கோவை மாநகரம் முழுவதும் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் இன்று அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாநகரம் முழுவதும் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் இன்று அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதிக ஒலி ஏற்படுத்தும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பொருத்த தடை விதிக்கபட்டுள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில் சட்டவிதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பேருந்துகளிலும், கனரக வாகனங்களிலும் பயன்படுத்தபட்டு வருகிறது.

மேலும், இந்த ஹாரன்களின் சத்தத்தால் வாகன ஓட்டிகள் மாற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சாதாரணமாகவே அதிக ஒலியால் செவித்திறனில் பாதிப்பு ஏற்படும், இதில் 80 டெசிபல் அளவை தாண்டும் ஒலியால் அதிர்ச்சிகளும் இதய நோய்களும் ஏற்படுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மாநகர காவல் ஆணையாளர் சுமித்திரன் உத்தரவின்பேரில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இப்படி திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி ஹாரன்களை பயன்படுத்தும் பேருந்துகள் மற்றும் லாரி ஓட்டுனர்களிடம் அபராதமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து இதுபோன்று விதி மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.