கோவை: கோயம்புத்தூர் கேரள சமஜாத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 19ம் தேதி சி.எம்.எஸ் பள்ளியில் நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் கேரள சமஜாத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் 19ம் தேதி சி.எம்.எஸ் பள்ளியில் நடைபெறுகிறது. இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது.
கேரள சமாஜத்தின் தலைவர் வின்சென்ட் லூயிஸ் பேசுகையில், பொன்விழா கொண்டாட்டங்களை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்க உள்ளதாகவும் கோயம்புத்தூர் கேரள சமாஜம் 1970ம் ஆண்டு நடிகர் ஜெமினி கணேசனால் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் இந்த சமாஜத்தில் கேரளாவில் இருந்து வேலை நிமித்தமாகவும், தொழில் மற்றும் வணிக நிமித்தமாகவும் கோவைக்கு குடிபெயர்ந்த கேரள மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர் என தெரிவித்தார்.
கோவை மாநகரத்தில் சுமார் 5 லட்சம் பேர் மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளதாகவும் வரும் 19ம் தேதி கணபதி பகுதியில் உள்ள சி.எம்.எஸ் பள்ளி வளாகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது எனவும் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூன், பி.ஆர்.ஜி.அருண்குமார் மலையாள நடிகர்கள் மேகநாதன், சந்தோஷ் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறினார்.
மேலும், பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள், நடன போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், மருத்துவ உதவிகள், உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கி முன்னாள் தலைவர்களுக்கு சிறப்பு செய்ய உள்ளதாகவும் இதனை தொடர்ந்து பொன்விழா மலர் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது கேரள சமாஜத்தின் செயலாளர் செபஸ்டியன் ஜோஸ், பொருளாளர் மசூதனன் மற்றும் பொன்விழா நிகழ்ச்சியின் செயலாளர் விசாகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.